மாணவனுடன் பாலியல் உறவு: ஆசிரியைக்கு சிறை!

0

teacherஇங்கிலாந்தில் 16 வயது மாணவனொருவனுடன் உடலுறவுகொண்ட 24 வயதான ஆசிரியைக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கியுள்ளதுடன், இனிமேல் சிறுவர்களுக்கு பாடம் நடத்தக்கூடாது என உத்தரவும் பிறப்பித்துள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவது,

ஆசிரியையான ரோசன்னா லாங்க்லி 16 வயது மாணவனுடன் 6 வாரமாக தகாத உறவு வைத்திருந்துள்ளார்.

மேலும் அம்மாணவனது பெயரை தனது மார்பில் பச்சைக் குத்தியும், தனது நிர்வாணப் படங்கள் உள்ளிட்டவை அடங்கிய 1500 எஸ்.எம்.எஸ்.களை அனுப்பியும் சிக்கியுள்ளார் .

இவர் தனது வகுப்பில் படிக்கும் 16 வயது மாணவனையே தனது வலையில் வீழ்த்தியுள்ளார்.

அம் மாணவனை வார இறுதி நாட்களில் லண்டனுக்கு வெளியே கூட்டிச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.

இதுதவிர தனது உறவு நீடிப்பதற்காக, தான் கர்ப்பமடைந்துள்ளதாக அந்த மாணவனிடம் பொய் கூறியுள்ளார்.

அம் மாணவனை பாலியல் அடிமை போல பயன்படுத்தி வந்துள்ளார் அந்த ஆசிரியை.

இந்த விவகாரம் வெளியில் தெரியவே பொலிஸார் அந்த ஆசிரியையை கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நீதிமன்றில் அவர் மீது விசாரணை நடந்து 8 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும் 2 வருடத்திற்கு இந்தத் தண்டனை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், இனிமேல் இந்த ஆசிரியை, சிறார்களுக்குப் பாடம் நடத்தக் கூடாது என நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Leave a Reply