வேற்றுக்கிரகவாசிகளால் பறக்கும் தட்டுக்கு கடத்தப்பட்டேன்: அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் பரபரப்பு

0

baronஅமெ­ரிக்­காவின் பிர­பல கூடைப்­பந்­தாட்ட வீரர்­களில் ஒரு­வ­ரான பரோன் டேவிஸ், தன்னை வேற்றுக் கிர­க­வா­சிகள் பறக்கும் தட்­டுக்கு கடத்திச் சென்று மீண்டும் பூமியில் இறக்­கி­விட்­ட­தாக கூறி பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்ளார்.

இரு வாரங்­க­ளுக்கு முன் அமெ­ரிக்­காவின் லாஸ் வேகாஸ் நக­ரி­லி­ருந்து லொஸ் ஏஞ்சல்ஸ் நகரை நோக்கி தான் சென்­று­கொண்­டி­ருந்­த­போது இச்­சம்­பவம் இடம்­பெற்­ற­தாக அவர் தெரி­வித்தார்.

34 வய­தான பரோன் டேவிஸ் 6 அடி 3 அங்­குல உய­ர­மா­னவர். அமெ­ரிக்­காவின் பல்­வேறு கழ­கங்­க­ளுக்­காக விளை­யா­டி­யவர். இரு தட­வைகள் அமெ­ரிக்க அனைத்து நட்­சத்­திர அணி­யிலும் இடம்­பெற்­றவர். இறு­தி­யாக 2012 ஆம் ஆண்டு நியூயோர்க் நைக்ஸ் கழ­கத்­துக்­காக விளை­யா­டி­யவர். 2001 ஆம் ஆண்டு குட்வில் போட்­டி­களில் தங்­கப்­ப­தக்கம் வென்ற அமெ­ரிக்க அணி­யிலும் அவர் இடம்­பெற்றார்.

கடந்த வியா­ழ­னன்று “த சம்ப்ஸ்” எனும் நேர்­காணல் நிகழ்ச்­சியில் பங்­கு­பற்­றிய அவர், தன்னை வேற்று கிர­க­வா­சிகள், அவர்­களின் பிரதான விண்­வெளிக் கல­மொன்­றுக்கு (பறக்கும் தட்­டுக்கு) கொண்டு சென்­ற­தாக கூறினார்.

“இரு வாரங்­க­ளுக்கு முன் நான் உண்­மையில் வேற்­று­க் கி­ரகவாசி­களால் கடத்­தப்­பட்டேன். லாஸ் வேகா­ஸி­லி­ருந்து லொஸ் ஏஞ்­சல்­ஸுக்கு காரை செலுத்திக் கொண்­டி­ருந்­த­போது இது இடம்­பெற்­றது. அவ்­வே­ளையில் நான் சற்று களைப்­ப­டைந்­தி­ருந்தேன். திடீ­ரென பெரும் வெளிச்­சத்தைக் கண்டேன். பாரிய ட்ரக் ஒன்று நிறுத்­தப்­பட்­டி­ருப்­ப­தாக நான் நினைத்தேன்.

அதன்பின் நான் பாதி­ய­ளவு மனி­தர்­களைப் போன்ற அவ­லட்­ச­ணமான நபர்­களைக் கண்டேன். அவர்கள் என்னை தமது விண்­வெளி ஓடத்தின் மூலம் தமது பிரதான க­லத்­துக்கு கொண்டு சென்­றார்கள்.” என பரோன் டேவிஸ் கூறினார்.

இதற்­குமுன் வேற்றுக் கிர­க­வா­சி­களின் பறக்கும் தட்­டையும் வேற்­றுக்­கி­ரக வாசிகள் போன்ற இனந்­தெ­ரி­யாத நபர்­க­ளையும் கண்­ட­தா­கவும் சிலர் கூறி­யுள்­ளனர். ஆனால், பறக்கும் தட்­டு­வா­சி­களால் பூமியி­லுள்ள மனிதர் ஒருவர் தமது பறக்கும் தட்­டுக்கு கடத்­தப்­பட்­ட­தாக அல்­லது பறக்கும் தட்­டுக்கு அழைத்துச் செல்­லப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­வது இதுவே முதல் தடவை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

பரோன் டேவிஸ் கூறு­வதை மேற்­படி நிகழ்ச்­சியை நடத்­திய நீல் பிரெனன், மோஷ் கேஷர் ஆகியோர் கூட நம்­ப­வில்லை. “நீங்கள் சீரி­ய­ஸாக சொல்­கி­றீர்­களா? என செவ்வி கண்­ட­வர்­களில் ஒருவர் கேள்வி எழுப்­பினார்.

“ ஆமாம். உண்­மை­யாக. அவர்கள் எனது மூக்கில் குத்­தி­னார்கள். எனது கண்­களை உற்று நோக்­கி­னார்கள்” என டேவிஸ் பதி­ல­ளித்தார். அவர் தனது கூற்­று­களை வாபஸ் பெற்­றுக்­கொள்­வ­தற்கு வழங்­கப்­பட்ட பல வாய்ப்­பு­க­ளையும் நிரா­க­ரித்தார்.

“எனது கைகள் கட்­டப்­பட்­டி­ருந்­தன. அதன்பின் நான் மொன்ட்­பெல்­லோவில் (லொஸ் ஏஞ்­சல்­ஸி­லுள்ள ஒரு நகரம்) இருந்­த­மைதான் எனக்குத் தெரியும்” என பரோன் டேவிஸ் சத்­தியம் பண்­ணாத குறை­யாக கூறினார். அதை­ய­டுத்து இத்­த­க­வல்கள் அமெ­ரிக்­காவின் பல முக்கிய ஊட­கங்­களில் பர­ப­ரப்புச் செய்­தி­யாக வெளி­யா­கின.

ஆனால், இரு­நாட்­களின் பின்னர் நேற்று முன்­தினம் தனது டுவிட்டர் பக்­கத்தில், வேற்­று­க்கி­ர­க­வா­சிகள் விடயம் ஒரு ஜோக் என பரோன் டேவிஸ் தெரி­வித்தார். அதே டுவிட்டர் செய்­தியில் “எனக்கு உத­வுங்கள். என் வீட்­டுக்கு வெளியே கறுப்பு உடை­ய­ணிந்த நபர்கள் நிற்­கி­றார்கள்” எனவும் அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

எனினும் பரோன் டேவிஸ் தொலைக்­காட்சி நிகழ்ச்­சியில் கூறி­யவை உண்­மையா அல்­லது பின்னர் டுவிட்­டரில் கூறியது உண்மையா என பலர் சந்தேகம் தெரிவிக்கின்றனர். வேற்றுக்கிரகவாசிகளால் கடத்தப்பட்டதாக கூறி இரண்டு நாட்கள் ஊடகங்களில் பரபரப்பாக செய்திகள் வெளிவரச் செய்த பரோன் டேவிஸுக்கு எதிராக அமெரிக்க அதிகாரிகளால் ஏதேனும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Leave a Reply