ஜேர்மனியில் பெண் ஒருவர் 6.1 கிலோ கிராம் எடை உள்ள குழந்தையை சுக பிரசவம் மூலம் பெற்றெடுத்துள்ளார்.
ஜேர்மனி லீப்சிக்கில் உள்ள பல்கலைக்கழக வைத்தியசாலையில் இளம்பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த 26ஆம் திகதி பெண் குழந்தை பிறந்துள்ளது. 6.1 கிலோ கிராம் எடையுள்ள பெரிய குழந்தையை அவர் சுக பிரசவத்தில் பெற்றெடுத்துள்ளார்.
வழக்கமாக குழந்தை பெரியதாக இருந்தால் சிசேரியன் மூலம் தான் குழந்தையை எடுப்பார்கள். ஆனால் அப்பெண் சுக பிரசவத்தில்
பெற்றெடுத்துள்ளமை பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அந்த பெண் கர்ப்பம் தரித்த பிறகு அவருக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளது. ஆனால் அது கவனிக்கப்படாமல் இருந்துள்ளது. அதனால் தான் குழந்தை மிகவும் பெரியதாக பிறந்துள்ளது என்று கூறப்படுகிறது. அந்த குழந்தைக்கு ஜஸ்லீன் என்று பெயர் வைத்துள்ளார்கள்.
ஜஸ்லீன் தொடர்ந்து வைத்தியசாலையில் இருந்தாலும் அவரும், அவரது தாயும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஜேர்மனியில் இதுவரை பிறந்த குழந்தைகளிலேயே ஜஸ்லீன் தான் மிகப்பெரிய குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.