மழையின் துளிகள் மண்ணில் விழ
என் நினைவுத் துளிகள் பின்னோக்கி எழ…..
அன்று சிறு வயதில்
அம்மா வேண்டாமென்று சொல்லச் சொல்ல
மழையில் நனைந்தது……..
பின் கடிந்துக் கொண்டே அம்மா
தலையைத் துவட்டியது…….
மழைக்கு இதமாக அம்மாவின் கையால்
சூடானத் தேநீர் பருகியது……
மழையில் நனைந்ததால் பின்
காய்ச்சலில் அவதிப் பட்டது……
மழையைத் திட்டியப்படி அம்மா
என்னை கவனித்துக் கொண்டது……..
இப்பொழுது அந்த நினைவுத்துளிகள்
ஏற்படுத்தியக் கண்ணீர்த் துளிகள் ….
மழைத்துளியுடன் கலந்து சங்கமமானது
“என் தாய்” சங்கமித்த இம்மண்ணில்…….
-லதா-